» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் 7 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு : அரசாணை வெளியீடு
திங்கள் 31, மார்ச் 2025 8:18:46 AM (IST)
தமிழகத்தில் 7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

அதன்படி, சமீபத்தில் மாமல்லபுரம், ஸ்ரீபெரும்புதூர், திருவையாறு (தஞ்சை மாவட்டம்) ஆகிய 3 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டன.
அந்த வரிசையில் தற்போது கன்னியாகுமரி, போளூர், செங்கம் (திருவண்ணாமலை மாவட்டம்), சங்ககிரி (சேலம் மாவட்டம்), கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்), அவினாசி (திருப்பூர் மாவட்டம்), பெருந்துறை (ஈரோடு மாவட்டம்) ஆகிய 7 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதற்கான அரசாணை தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த 7 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டிருப்பதன் மூலம் இங்கு பாதாள சாக்கடை வசதி, சுகாதாரமான குடிநீர், கொசு ஒழிப்பு, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளில் அதிக கவனம் செலுத்தப்படும் என்றும், அதேவேளையில் சொத்து வரி, தொழில்வரி உள்ளிட்டவை உயரும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி அனந்தன் உடலுக்கு கனிமொழி எம்பி அஞ்சலி : தமிழிசைக்கு ஆறுதல் கூறினார்!
புதன் 9, ஏப்ரல் 2025 11:33:44 AM (IST)

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவு : முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி!
புதன் 9, ஏப்ரல் 2025 11:02:46 AM (IST)

தேங்காய்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்தில் ரூ.120 கோடியில் பணிகள் : மீனவர் நலன் ஆணையர் ஆய்வு
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 8:36:02 PM (IST)

வருகிற சட்டமன்றத் தேர்தலிலும் தனித்துப் போட்டி என்பதே எனது நிலைப்பாடு : சீமான் பேட்டி
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 5:45:02 PM (IST)

உச்ச நீதிமன்றம் அதிருப்தி: டாஸ்மாக் விவகாரத்தில் தமிழக அரசின் மனு வாபஸ்!
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 5:34:34 PM (IST)

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு எதிரொலி : பல்கலை வேந்தராகிறார் தமிழக முதல்வர்
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 4:42:55 PM (IST)
