» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அருமனை அருகே நர்சிங் மாணவி திடீர் மரணம் : போலீசார் விசாரணை

வெள்ளி 28, மார்ச் 2025 8:18:56 PM (IST)

அருமனை அருகே நர்சிங் மாணவி திடீரென இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குமரி மாவட்டம், அருமனை அருகே பிலாக்காடு, சூட்டூர்கோ ணம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் ராஷிகா (18). இவர் தலக்குளம் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் நர்சிங் முதலாம் ஆண்டு விடுதியில் தங்கி பயின்று வந்தார். இந்நிலையில் ராஷிகாவுக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக தலைவலி ஏற்பட்டு வாந்தியும் இருந்ததாக தெரிகிறது. இதைத்தொ டர்ந்து ராஷிகா தனது வீட்டுக்கு வந்து பெற்றோரிடம் நிலைமையை கூறியுள்ளார். 

இதையடுத்து ராஷிகாவை பெற்றோர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு ராஷிகாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு நோய்கள் எதுவும் இல்லை என கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று இரவு சாப்பாடு முடிந்து ராஷிகா தூங்கி உள்ளார். இன்று காலையில் ராஷிகா எந்த அசைவும் இல்லாமல் மயங்கிய நிலையில் இருந்தார். 

உடனடியாக அவரை பெற்றோர்கள் மீட்டு குலசேகரம் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ராஷிகாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனை அறிந்த ராஷிகாவின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக அருமனை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நர்சிங் மாணவி திடீரென இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

New Shape Tailors



Arputham Hospital







Thoothukudi Business Directory