» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் டாஸ்மாக் ஊழலை முறையாக விசாரிக்க வேண்டும் : த.வெ.க. பொதுக்குழு தீர்மானம்
வெள்ளி 28, மார்ச் 2025 11:08:09 AM (IST)

தமிழகத்தில் டாஸ்மாக் ஊழலை முறையாக விசாரிக்க வேண்டும் என்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக விஜய் அறிவித்துள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் அமைப்பு ரீதியாக கட்சியை பலப்படுத்தி வருகிறார். கடந்த மாதம் இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதன்பிறகு மாவட்ட அளவிலான நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட நிலையில், இன்று பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
கூட்டம் தொடங்கியவுடன் விஜய் உள்பட அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். மேடையில் விஜய்யுடன் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட நிர்வாகிகள் அமர்ந்துள்ளனர். மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், பொதுக் குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளராக அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஒரு பெண் பிரதிநிதி என 2,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில், இருமொழிக் கொள்கைக்கு ஆதரவு, வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு, நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை, பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மேலும், தமிழகத்தில் நிலவும் சட்ட ஒழுங்கு பிரச்னைக்கு கண்டனம் தெரிவித்தும், டாஸ்மாக் ஊழலை முறையாக விசாரிக்க வேண்டும், அரசு ஊழியர்களை நம்ப வைத்து ஏமாற்றுவதற்கு கண்டனம், இலங்கை தமிழர் பிரச்னைக்கு பொது வாக்கெடுப்பு உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதேபோல், தவெக தலைவருக்கு முழு அதிகாரம் வழங்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் வரை நடைபெறவுள்ள கூட்டத்தின் இறுதியில் கட்சியின் தலைவர் விஜய் நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றவுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நீட் எதிர்ப்பு என்ற பெயரில் சுயநல நாடகம்: முதல்வர் ஸ்டாலின் மீது அண்ணாமலை குற்றச்சாட்டு!
புதன் 9, ஏப்ரல் 2025 12:08:58 PM (IST)

குமரி அனந்தன் உடலுக்கு கனிமொழி எம்பி அஞ்சலி : தமிழிசைக்கு ஆறுதல் கூறினார்!
புதன் 9, ஏப்ரல் 2025 11:33:44 AM (IST)

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவு : முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி!
புதன் 9, ஏப்ரல் 2025 11:02:46 AM (IST)

தேங்காய்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்தில் ரூ.120 கோடியில் பணிகள் : மீனவர் நலன் ஆணையர் ஆய்வு
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 8:36:02 PM (IST)

வருகிற சட்டமன்றத் தேர்தலிலும் தனித்துப் போட்டி என்பதே எனது நிலைப்பாடு : சீமான் பேட்டி
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 5:45:02 PM (IST)

உச்ச நீதிமன்றம் அதிருப்தி: டாஸ்மாக் விவகாரத்தில் தமிழக அரசின் மனு வாபஸ்!
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 5:34:34 PM (IST)
