» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனுக்கு சம்மன்!
செவ்வாய் 25, மார்ச் 2025 12:19:50 PM (IST)
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலிலதாவின் முன்னாள் வளர்ச்சி மகன் சுதாகரனுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட கனகராஜ், சேலம் ஆத்தூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த வழக்கில் சயான், மனோஜ், தீபு, சதீஷன், ஜம்சேர் அலி, சந்தோஷ் சாமி, பிஜின் குட்டி, உதயகுமார், மனோஜ் சாமி உள்பட 12 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.அதிமுகவின் முந்தைய ஆட்சியில் வழக்கின் விசாரணை முடிந்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
இந்த நிலையில், வருகிற 27ந்தேதி கோவை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நேரில் ஆஜராக வருமாறு சுதாகரனுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் அனுப்பியுள்ள சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடநாடு எஸ்டேட் பங்குதாரராக இருந்ததன் அடிப்படையில் சுதாகரனுக்கு சம்மன் அனுப்பியதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக இதுவரை 250 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமியிடம் செல்போனில் ஆபாச படம் கேட்டு தொந்தரவு : கல்லூரி மாணவர் போக்சோவில் கைது
வியாழன் 10, ஏப்ரல் 2025 9:04:33 AM (IST)

மதுரையில் ஓய்வுபெற்ற டிஎஸ்பி மர்ம சாவு: பூட்டிய வீட்டில் இருந்து உடல் மீட்பு
புதன் 9, ஏப்ரல் 2025 5:46:34 PM (IST)

சகோதரன் கைது: காவல்நிலையம் முன்பு விஷம் குடித்த 2 சகோதரிகள்; ஒருவர் உயிரிழப்பு!
புதன் 9, ஏப்ரல் 2025 5:16:00 PM (IST)

தென்காசி, கோவை உட்பட 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு
புதன் 9, ஏப்ரல் 2025 4:36:09 PM (IST)

நீட் எதிர்ப்பு என்ற பெயரில் சுயநல நாடகம்: முதல்வர் ஸ்டாலின் மீது அண்ணாமலை குற்றச்சாட்டு!
புதன் 9, ஏப்ரல் 2025 12:08:58 PM (IST)

குமரி அனந்தன் உடலுக்கு கனிமொழி எம்பி அஞ்சலி : தமிழிசைக்கு ஆறுதல் கூறினார்!
புதன் 9, ஏப்ரல் 2025 11:33:44 AM (IST)
