» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் : எடப்பாடி பழனிசாமி கண்டனம்
திங்கள் 24, மார்ச் 2025 5:13:22 PM (IST)
"ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் வீட்டில் 50 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியிருப்பது, கீழ்த்தரமான செயல்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள யாரும் இதை சகித்துக்கொள்ள மாட்டார்கள். உண்மையில் இந்தச் சம்பவம் கொடுமையின் உச்சம். அராஜகத்தின் வெளிப்பாடு. சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என்று கூறிக்கொள்ளும் திமுக-வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியில் இப்படிப்பட்ட சம்பவம் நடந்தேறியது, மனசாட்சியுள்ள அனைவரும் தலைகுனிந்து வெட்கப்பட வேண்டிய ஒரு சம்பவமாகும்.
இந்தக் கொடுமையான செயலை செய்த கும்பலையும், பின்னணியில் உள்ள அனைவரையும் சட்டத்தின் முன்பு நிறுத்தி கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். சட்டப்படி நடவடிக்கை எடுக்க தவறும்பட்சத்தில், அதிமுக பதவியேற்றவுடன், தூய்மைப் பணியாளர்கள் போர்வையில் இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள், பின்னணியில் உள்ளவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கிறேன்.” என்று அவர் கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேங்காய்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்தில் ரூ.120 கோடியில் பணிகள் : மீனவர் நலன் ஆணையர் ஆய்வு
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 8:36:02 PM (IST)

வருகிற சட்டமன்றத் தேர்தலிலும் தனித்துப் போட்டி என்பதே எனது நிலைப்பாடு : சீமான் பேட்டி
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 5:45:02 PM (IST)

உச்ச நீதிமன்றம் அதிருப்தி: டாஸ்மாக் விவகாரத்தில் தமிழக அரசின் மனு வாபஸ்!
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 5:34:34 PM (IST)

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு எதிரொலி : பல்கலை வேந்தராகிறார் தமிழக முதல்வர்
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 4:42:55 PM (IST)

விஜய்க்கு நடிக்கவும், ஏமாற்றவும் மட்டுமே தெரியும் : தமிழிசை சௌந்தரராஜன் தாக்கு!
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 4:27:55 PM (IST)

ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு : கனிமொழி எம்பி வரவேற்பு
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 4:20:56 PM (IST)
