» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்தில் சீரமைப்பு பணிகள் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வெள்ளி 21, மார்ச் 2025 12:46:49 PM (IST)

தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுக பகுதிகளை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுக பகுதிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (20.03.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் "தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 15 முதல் 17ஆம் தேதி வரை கள்ளக் கடல் ஏற்பட்டதால் பிரதான அலை தடுப்புச்சுவர் சேதமடைந்தது.
சேதமடைந்த 75 மீட்டர் நீளமுள்ள பிரதான அலை தடுப்புச் சுவர் சீரமைக்கும் நடவடிக்கைகள் மற்றும் பணிகளின் முன்னேற்பாடு குறித்து அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது. மேலும் பாதிப்புகளை போர்க்கால அடிப்படையில் உடனடியாக சீரமைத்து துறைமுக பாதுகாப்பையும், மீனவ மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும், உடனடியாக சீரமைப்பு பணிகளுக்கு விரைந்து ஒப்புதல் பெற்று பணிகளை மேற்கொள்ள துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்.
ஆய்வில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குனர் சின்னகுப்பன், உதவி இயக்குனர் அஜித் ஸ்டாலின், உதவி செயற்பொறியாளர் அரவிந்த் குமார், கிள்ளியூர் வட்டாட்சியர் ராஜசேகர் துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)










