» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தேங்காய்பட்டணம் மீன்பிடித்துறைமுக பணிகள் விரைவில் துவங்கும்: ஆட்சியர் தகவல்
செவ்வாய் 18, மார்ச் 2025 3:49:03 PM (IST)

தேங்காய்பட்டணம் மீன்பிடித்துறைமுக பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் வட்டத்திற்குட்பட்ட தேங்காய்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் மீன்வளத் துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (18.03.2025) துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- தேங்காய்பட்டணம் மீன்பிடித் துறைமுகமானது தமிழ்நாட்டின் முக்கிய மீன்பிடித் துறைமுகங்களில் ஒன்றாகும்.
இத்துறைமுகமானது தாமிரபரணி ஆற்றின் முகத்துவார பகுதியில் அமைந்துள்ளது. இத்துறைமுகத்தில் 320 விசைப்படகுகளும், 2000 நாட்டுப்படகுகளும் பாதுகாப்பாக நிறுத்திடவும் மற்றும் மீன்களை கையாளவும் தேவையான கட்டுமான பணிகள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்துறைமுகத்தின் மூலம் 8000 மீனவர்கள் நேரடியாகவும் 12,000 மீனவர்கள் மறைமுகமாகவும் பயனடைந்து வருகின்றனர்.
இத்துறைமுகத்தின் இரயுமன்துறை பகுதி விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இக்கட்டுமான பகுதியின் அருகாமையில் அமைந்துள்ள இரயுமன்துறை மீனவ கிராமத்தை பாதுகாத்திடவும், அக்கிராம மீனவ மக்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி விட்டு மீன்பிடித்துறைமுக விரிவாக்க பணிகளை மேற்கொண்டிட கேட்டு அம்மீனவ கிராம பிரதிநிதிகள் மூலமாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இவ்வழக்கினை விரைந்து முடித்திடவும், தமிழ்நாடு முதலமைச்சரின் முக்கியமான திட்டங்களில் ஒன்றான இத்துறைமுக விரிவாக்க பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என ஆட்சியர் தெரிவித்தார்.
ஆய்வின்போது, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் சின்னகுப்பன், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர், கிள்ளியூர் வட்டாட்சியர் ராஜசேகர், துறை சார்ந்த அலுவலர்கள், மீன்பிடித்துறைமுக திட்ட கோட்ட பொறியாளர்கள் உட்பட கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல் அதிகாரி ஜாகிர் உசேன் படுகொலைக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும்: அன்புமணி
செவ்வாய் 18, மார்ச் 2025 5:21:35 PM (IST)

முதல்வர் மருந்தகங்களில் மக்களுக்கு தேவையான மருந்துகள் இல்லை : தினகரன் குற்றச்சாட்டு
செவ்வாய் 18, மார்ச் 2025 4:37:47 PM (IST)

நெல்லையில் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி கொலை: எஸ்டிபிஐ கட்சி கண்டனம்
செவ்வாய் 18, மார்ச் 2025 3:40:59 PM (IST)

தரமான பொருட்களை வாங்குவதில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்: ஆட்சியர்
செவ்வாய் 18, மார்ச் 2025 3:31:03 PM (IST)

தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை கட்டும் திட்டம் நிறைவேற்றப்படும்: அமைச்சர் துரைமுருகன்
செவ்வாய் 18, மார்ச் 2025 12:14:04 PM (IST)

கன்னியாகுமரியில் மும்பை சிறப்பு ரயில் புறப்படும் நேரம் மாற்றம்
செவ்வாய் 18, மார்ச் 2025 11:49:32 AM (IST)
