» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நாகர்கோவிலில் இருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் இயக்கம் : தெற்கு ரயில்வே தகவல்!
செவ்வாய் 18, மார்ச் 2025 11:03:29 AM (IST)

கேரளாவில் ரயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் மார்ச் 29 ந் தேதி நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் கோட்டத்திற்குட்பட்ட நெய்யாற்றின்கரா-பாரசாலா ரயில் நிலையம் இடையே பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "சென்னை எழும்பூரில் இருந்து வரும் 28-ந்தேதி காலை 10.20 மணிக்கு புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி எண்.16127 நாகர்கோவில் டவுன்-குருவாயூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, நாகர்கோவில் டவுனில் நிறுத்தப்படும்.
மறுமார்க்கமாக, குருவாயூரில் இருந்து வரும் 29-ந்தேதி இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி எண் 16128 குருவாயூர்-நாகர்கோவில் டவுன் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இந்த ரயிலானது குருவாயூரில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக நாகர்கோவில் டவுனில் ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் செல்கிறது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மங்களூரு சென்டிரலில் இருந்து மார்ச் 28-ந்தேதி காலை 5 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி வரும் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரெயில் வண்டி எண் 16649 திருவனந்தபுரம் சென்டிரல்-கன்னியாகுமரி இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, திருவனந்தபுரம் சென்டிரலில் நிறுத்தப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)










