» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது: ஜி.கே. வாசன் குற்றச்சாட்டு

புதன் 29, ஜனவரி 2025 5:27:09 PM (IST)

ஆளும் கட்சியின் கொடியுடன் சென்று பெண்களை மிரட்டியது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததற்கான எடுத்துக்காட்டு என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தமிழக அரசு, மாநிலம் முழுவதும் பெண்களுக்கான பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசு, பெண்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் காரில் சென்று கொண்டிருந்த பெண்களை துரத்திய அத்துமீறலில் ஈடுபட்ட தி.மு.க கொடி பொருத்திய காரில் சென்ற நபர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து தண்டனை கிடைக்க வழி வகுக்க வேண்டும்.

இரவு நேரங்களில் காரில் செல்லும் பெண்களுக்கு தொந்தரவு செய்வது, மிரட்டல் விடுப்பது, பணம் பறிப்பது போன்றவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக நேற்று நடந்த சம்பவத்தில், ஆளும் கட்சியின் கொடியுடன் சென்று மிரட்டியது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததற்கான எடுத்துக்காட்டு.

பெண்களுக்கு எதிரான போக்கை காவல்துறை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.இந்த குற்றச்செயல்கள் நடைபெறுவதற்கு காரணம் டாஸ்மாக் மற்றும் போதைப்பொருட்கள். இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று த.மா.கா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors




Arputham Hospital





Thoothukudi Business Directory