» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ்ப் புதல்வன் திட்டத்துக்கு ரூ. 401 கோடி ஒதுக்கீடு : தமிழக அரசு உத்தரவு

வியாழன் 25, ஜூலை 2024 11:44:50 AM (IST)

தமிழ்ப் புதல்வன் திட்டத்துக்கு ரூ. 401 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

உயா் கல்விக்கு செல்லும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம், ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வரும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், முதல்கட்டமாக 3.28 லட்சம் மாணவர்கள் தமிழ்ப் புதல்வர் திட்டத்தில் பயன்பெறவுள்ள நிலையில், ரூ. 401.47 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்கள் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்றிருக்க வேண்டும். ஆதார் எண் கட்டாயம். ஏற்கெனவே அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டம் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital





Thoothukudi Business Directory