» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாணவிக்கு ஆபாச வீடியோ அனுப்பி பாலியல் தொல்லை: அரசு பள்ளி ஆசிரியர் கைது!

செவ்வாய் 23, ஜூலை 2024 8:21:31 AM (IST)

சாத்தூர் அருகே மாணவி செல்போனுக்கு ஆபாச வீடியோ, படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்த அரசுப்பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஒரு அரசு உயர்நிலைப்பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் சாத்தூர் அருகே உள்ள சடையம்பட்டி பகுதியை சேர்ந்த தங்கப்பாண்டியன் (வயது38), ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

அதே பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர், தனது தாயாரின் செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார். அந்த செல்போனுக்கு அடிக்கடி தங்கப்பாண்டியன் ஆபாச படங்கள், வீடியோக்களை அனுப்பி உள்ளார். இதனை வெளியே செல்லக்கூடாது என மிரட்டி அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் உறவினர் ஒருவர் அந்த மாணவியிடம் இருந்த செல்போனை வாங்கி பார்த்த போது அதில் நிறைய ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அந்த மாணவியிடம் விசாரித்த போது ஆசிரியர் தங்கப்பாண்டியன் நீண்ட நாட்களாக ஆபாச வீடியோ மற்றும் ஆபாச படங்களை அனுப்பி பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறினார். இதையடுத்து மாணவியின் தாய், சாத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் தங்கப்பாண்டியனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital




Thoothukudi Business Directory