» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மீனவர் வெட்டிக்கொலை: தடுக்க முயன்ற மகனையும் வெட்டிய 3 பேருக்கு வலைவீச்சு

வியாழன் 9, மே 2024 9:14:00 AM (IST)

கூடங்குளம் அருகே மீனவர் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதனை தடுக்க முயன்ற மகனையும் வெட்டிய 3 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே கூத்தங்குளி மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் டேவிட் (55). இவருடைய மகன் அகாலிஸ் (19). மீனவர்களான இவர்கள் நேற்று முன்தினம் இரவில் வழக்கம்போல் கடலில் மீன்பிடிக்க செல்வதற்காக ஒரு மோட்டார் சைக்கிளில் கடற்கரைக்கு புறப்பட்டு சென்றனர்.

அங்குள்ள காட்டுப்பகுதி வழியாக சென்றபோது, அங்கு அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மறைந்து இருந்த 3 பேர் கொண்ட மர்மகும்பல் திடீரென்று மோட்டார் சைக்கிளை வழிமறித்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த டேவிட், அவருடைய மகன் அகாலிஸ் தப்பிச் செல்ல முயன்றனர்.

எனினும் டேவிட்டை சுற்றி வளைத்த கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியும், கத்தியால் குத்தியும் கொலைவெறி தாக்குதல் நடத்தியது. இதனை தடுக்க முயன்ற அவருடைய மகன் அகாலிசையும் கும்பல் அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும் தாக்கியது. அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதையடுத்து மர்மகும்பல் இருளில் தப்பி சென்று விட்டது.

இதில் பலத்த காயமடைந்த டேவிட், அகாலிஸ் ஆகிய 2 பேரையும் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே டேவிட் பரிதாபமாக இறந்தார்.அகாலிசுக்கு அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், கொலையான டேவிட்டுக்கும், அதே ஊரைச் சேர்ந்த உறவினரான மீனவர் சகாய மைக்கேல்ராஜாவுக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரிய வந்தது. அதாவது ஒரே வீட்டில் அக்காள்-தங்கையை திருமணம் செய்த டேவிட்டுக்கும், சகாய மைக்கேல்ராஜாவுக்கும் இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது. இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் சகாய மைக்கேல்ராஜா, அவருடைய உறவினர்களான கிங், குமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து டேவிட்டை கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து தலைமறைவான அவர்கள் 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கூடங்குளம் அருகே மீனவர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory