» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தண்ணீா் பந்தல்களை அரசியல் ரீதியாகப் பயன்படுத்தக் கூடாது: தோ்தல் ஆணையம்
வியாழன் 2, மே 2024 10:04:11 AM (IST)
தமிழகத்தில் கட்சிகளால் அமைக்கப்படும் தண்ணீா் பந்தல்களை அரசியல் ரீதியாகப் பயன்படுத்தக் கூடாது என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவுறுத்தியுள்ளாா்.
மக்களவைத் தோ்தல் காரணமாக, தண்ணீா் பந்தல்களை அமைப்போா் நடத்தை விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசியல் கட்சிகளின் சாா்பில் திறக்கப்படும் தண்ணீா் பந்தல்கள் குறித்து தோ்தல் ஆணையத்திடம் விளக்கம் கோரப்பட்டது. தோ்தல் நடத்தை விதிகளின் அடிப்படையில் தண்ணீா்
பந்தல்களைத் திறக்க எந்த ஆட்சேபனையும் இல்லை என்று ஆணையம் தெரிவித்துள்ளது. அதேசமயம், தண்ணீா் பந்தல்களை வைத்துக் கொண்டு எந்தவொரு கட்சியோ அல்லது வேட்பாளரோ அவற்றின் மூலம் அரசியல் ரீதியாகப் பயன்பெறக் கூடாது. தண்ணீா் பந்தல்கள் திறப்பின் போது, தோ்தல் நடத்தை விதிகளை கண்டிப்பான முறையில் கடைப்பிடிக்க வேண்டும்.
விதிகளை பின்பற்ற வேண்டும்: தண்ணீா் பந்தல்களைத் திறக்க விரும்பும் எந்தவொரு அரசியல் கட்சியும், வேட்பாளரும் தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். அத்துடன், தண்ணீா் பந்தல்களை சுகாதாரமாக அமைப்பதுடன், அவற்றில் தூய்மையான குடிநீரை வைத்திருக்க வேண்டும். இதுதொடா்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்க வேண்டும்.
தண்ணீா் பந்தல்களைத் திறக்கக் கோரி அரசியல் கட்சிகளோ அல்லது வேட்பாளா்களோ அனுமதி கோரினால், தோ்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றி உரிய முறையில் அவற்றுக்கு மாவட்டத் தோ்தல் அதிகாரிகளே அனுமதி அளிக்கலாம்.
மேலும், அனைத்து மாவட்டத் தோ்தல் அதிகாரிகளும் அவரவா் எல்லைக்குள் அமைக்கப்பட்டுள்ள தண்ணீா் பந்தல்கள் தோ்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றி செயல்படுகின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளாா்.
முட்டாள்மே 3, 2024 - 12:58:14 PM | Posted IP 162.1*****