» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தேங்காபட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் மோதல் - 2பேர் காயம்!

வியாழன் 25, ஏப்ரல் 2024 4:36:40 PM (IST)

தேங்காபட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள்  இடையே ஏற்பட்ட மோதில் 2பேர் காயம் அடைந்தனர். 

குமரி மாவட்டம், மிடாலம் பகுதி உதயமார்த்தாண்டத்தை சேர்ந்தவர் அலெஸ்சாண்டர் மகன் அபிசன் சாண்டர் (32). இவர் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனை செய்து வருகிறார். ராமன் துறை பகுதியியை சேர்ந்தவர் அருள் டோனி (37) என்பவரும் அங்கு மீன் வியாபாரம் செய்து வருகிறார். சம்பவ தினம் மீன் ஏலம் எடுக்கும் இடத்தில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு அடிதடியில் ஈடுபட்டனர்

இதில் அருள் டோனி  ஆத்திரமடைந்து அபிசன் சாண்டரை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அபிசன் ஆற்றூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அருள்டோனி தேங்காபட்டணத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வருகிறார். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory