» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நம் சமூகத்திற்கு மீட்சியாக இருப்பவை கலைகளே: கனிமொழி கருணாநிதிபேச்சு!!
வியாழன் 25, ஏப்ரல் 2024 10:49:54 AM (IST)
வெறுப்புவாத அரசியலில் சிக்கித் தவிக்கும் நம் சமூகத்திற்கு மீட்சியாக இருப்பவை கலைகளே! என்று கனிமொழி கருணாநிதி பேசினார்.
சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள லலித் கலா அகாடமியில் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற வானம் கலை விழா - வேர்க்கோடுகள் விருது வழங்கும் நிகழ்வில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி மற்றும் இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பேசிய கனிமொழி கருணாநிதி: கலைகளும் அரசியலும் எப்போதும் ஒருமித்த பயணத்தை மேற்கொள்வதில்லை. தற்போது மிகப்பெரிய பதவிகளில் இருப்பவர்கள் வெறுப்பு பேச்சுகளைப் பேசிவரும் நிலையில் கலைகள் அன்பைக் கொடுக்க கூடிய ஒன்றாக உள்ளது. சக மனிதன் காட்டும் அன்பு மட்டும் தான், இந்த நாட்டில் உள்ள சமூகத்தை நாம் காப்பாற்ற முடியும் என்று பேசினார்.