» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ரயில் நிலையங்களில் மலிவு விலை உணவுகள் : தெற்கு ரயில்வே தகவல்!
புதன் 24, ஏப்ரல் 2024 4:26:00 PM (IST)
தெற்கு ரயில்வேயின், 25 ரயில் நிலையங்களில், மலிவு விலையில் உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இது குறித்து, தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பு: ரயில்வேயின் துணை நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சி., சார்பில், கோடை விடுமுறையையொட்டி, முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிப்போரின் வசதிக்காக, மலிவு விலையில் தரமான உணவு பொருட்கள் மற்றும் நொறுக்கு வகை தின்பண்டங்கள் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, முதல் கட்டமாக 25 ரயில் நிலையங்களின் நடைமேடைகளில், முன்பதிவு இல்லாத பெட்டிகள் நிற்கும் இடங்களில், 150 கவுன்டர்கள் அமைத்து, இந்த உணவு பொருட்கள் விற்கப்படுகின்றன. 20 ரூபாயில் ஜனதா சாப்பாடு, பூரி பாஜி, 20 ரூபாயில் தயிர் அல்லது எலுமிச்சை அல்லது புளிசாதம் வழங்கப்படும்.
இது தவிர, பொங்கல், கிச்சடி போன்ற உணவுகளில் ஏதாவது ஒரு வகை, 50 ரூபாயில், 350 கிராம் அளவில் வாங்கி கொள்ளலாம். 200 மில்லி குடிநீர் மூன்று ரூபாய்க்கு வழங்கப்படும்.
முதல் கட்டமாக, சென்னை ரயில் கோட்டத்தில் 5, திருச்சி கோட்டத்தில் 3, சேலம் கோட்டத்தில் 4, மதுரை கோட்டத்தில் 2, பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் கோட்டங்களில் 11 ரயில் நிலையங்களில் இந்த மலிவு விலை உணவுகள் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
BalaApr 24, 2024 - 10:42:34 PM | Posted IP 162.1*****
முதல்ல வடக்கன் ரிசர்வ் பெட்டி ல ஏறாம பாத்துக்கோங்கடா ..
Bala அவர்களேApr 25, 2024 - 09:41:38 AM | Posted IP 162.1*****