» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெண் போலீசிடம் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல்: கிராம உதவியாளர் மீது வழக்கு!

திங்கள் 22, ஏப்ரல் 2024 4:25:02 PM (IST)

சுசீந்திரம் அருகே பெண் போலீசிடம் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த கிராம உதவியாளர் மீது போலீசார்  வழக்கு பதிவு செய்துள்ளனர்.

குமரி மாவட்டம், கொற்றிகோடு காவல் நிலையத்தில் பணியாற்றி வருபவர் பெண் போலீஸ் ஏட்டு ரேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த 19ஆம் தேதி சுசீந்திரம் அருகே உள்ள ராமபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் பணியில் இருந்தார். அப்போது ராமபுரம் பகுதி ஆண்டார்குளத்தை சேர்ந்த தேரூர் கிராம நிர்வாக அதிகாரி அலுவலக உதவியாளரான பவுல் தம்பி (45) என்பவர் அங்கு பைக்கில் வந்துள்ளார்.

அப்போது வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் தான் வாகனங்களை நிறுத்த வேண்டும் வாக்குச்சாவடி அருகே நடத்தக்கூடாது எனறு பெண் போலீஸ் ஏட்டு கூறினார். அப்போது அவரிடம் பவுல்தம்பி ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்து அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ரேகா அளித்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் விசாரணை செய்து பவுல் தம்பி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory