» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகம் மிகப் பெரிய மாற்றத்தை காணப் போகிறது: விஜயதரணி பேட்டி.

வெள்ளி 19, ஏப்ரல் 2024 4:20:23 PM (IST)

அண்ணாமலைக்கு மக்களுடைய வரவேற்பு அமோகமாக உள்ளது. தமிழகம் மிகப் பெரிய மாற்றத்தை காணப் போகிறது என்று முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி தெரிவித்தார். 

விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி முன்னாள் எம்எல்ஏ. விஜயதரணி இன்று கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பதி சாரம் பகுதி அரசு பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிகள் தனது வாக்கினை பொதுமக்களுடன் நீண்ட வரிசையில் நின்று வாக்கு செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில் "விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 

கோவை தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நிச்சயம் வெற்றி பெறுவார். மக்களுடைய வரவேற்பு அமோகமாக உள்ளது. குறிப்பாக பெண்கள் அவர் வரவேண்டும் என ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். தமிழகத்தை பொறுத்த மட்டில் பாஜகவிற்கு வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. அதன்படி அதிகப்படியான இடங்களையும் கைப்பற்றும். எனவே தமிழகம் மிகப் பெரிய மாற்றத்தை காணப் போகிறது என்பதை என்னால் நிச்சயம் கூற முடியும். 

தன்னுடைய இலக்கு கட்சித் தலைமை தரக்கூடிய பணியை செம்மையாக செய்வது. கட்சியும் தனக்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என தெரிவித்தார்.


மக்கள் கருத்து

MakkalApr 19, 2024 - 07:19:27 PM | Posted IP 172.7*****

Pavam inthamma

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory