» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அரசு ஊழியர்களுக்கான தபால் வாக்கு பதிவு மையங்களை ஆட்சியர் ஆய்வு
சனி 13, ஏப்ரல் 2024 10:45:03 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் வாக்குரிமை பெற்ற அரசு ஊழியர்களுக்கான தபால் வாக்கு பதிவு மையங்களை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மார்த்தாண்டம் சேக்ரட் ஹார்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகர்கோவில் புனித ஜோசப் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆகியவற்றில், வெளி மாவட்டங்களில் வாக்குரிமை பெற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பணிபுரிகின்ற அரசு ஊழியர்கள் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் வாக்குரிமை பெற்றுள்ள அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு தபால் ஓட்டு பதிவு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள வசதி மையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பணிகளில் 13.04.2024 மற்றும் 14.04.2024 ஆகிய தேதிகளில் 229, கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கான வசதி மையம் புனித ஜோசப் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, ஆசாரிபள்ளம், நாகர்கோவிலிலும், 230, நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்கான வசதி மையம் அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, யு.சு. கேம்ப் ரோடு, நாகர்கோவிலிலும்,
231, குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கான வசதி மையம் புனித சேவியர் பொறியியல் கல்லூரி சுங்கான்கடையிலும், 232, பத்மனாபபுரம் சட்டமன்ற தொகுதிக்கான வசதி மையம் எக்ஸல் சென்ட்ரல் பள்ளி, திருவட்டாரிலும், 233, விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வசதி மையம் சேக்ரட் ஹார்ட் இன்டர்நேஷனல் பள்ளி பம்மம், மார்த்தாண்டத்திலும், 234, கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கான வசதி மையம் பெத்லகேம் பொறியியல் கல்லூரி, கருங்கலிலும் தங்களது வாக்கினை செலுத்தலாம்.
மேலும் பிற மாவட்டங்களில் வாக்குரிமை பெற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பணிபுரிகின்ற அரசு ஊழியர்கள் புனித ஜோசப் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி ஆசாரிபள்ளம், நாகர்கோவிலில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட வசதி மையத்தில் தங்களது வாக்கினை செலுத்தலாம். இவ்வாறு தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், அவரகள் தெரிவித்தார்கள்.
முன்னதாக கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மார்த்தாண்டம் சேக்ரட் ஹார்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகர்கோவில் புனித ஜோசப் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆகியவற்றில், வெளி மாவட்டங்களில் வாக்குரிமை பெற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பணிபுரிகின்ற அரசு ஊழியர்கள் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் வாக்குரிமை பெற்றுள்ள அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு தபால் ஓட்டு பதிவு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள வசதி மையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், உதவி தேர்தல் அலுவலர் சுப்புலெட்சுமி, கூடுதல் தேர்தல் கண்காணிப்பாளர்கள் செந்தில் வேல் முருகன் (விளவங்கோடு), சாந்தி (கன்னியாகுமரி), வட்டாட்சியர்கள் குமாரவேல் (விளவங்கோடு), கோலப்பன் (தோவாளை) அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கைலாசா நாடு எங்குள்ளது? உயர்நீதிமன்றம் கேள்விக்கு நிதியானந்தாவின் சீடர் பதில்
வியாழன் 19, ஜூன் 2025 5:30:04 PM (IST)

சாலை விபத்தில் வருவாய் கோட்டாட்சியர் உயிரிழப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
வியாழன் 19, ஜூன் 2025 5:15:37 PM (IST)

மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுபான விற்பனை: உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!
வியாழன் 19, ஜூன் 2025 5:10:23 PM (IST)

கத்திப்பாரா மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
வியாழன் 19, ஜூன் 2025 4:50:07 PM (IST)

கொடிக் கம்பங்களை அகற்றும் உத்தரவுக்கு எதிராக சட்டப்போராட்டம்: முத்தரசன் வலியுறுத்தல்!
வியாழன் 19, ஜூன் 2025 4:01:06 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத்தில் மருத்துவர் அணி பொறுப்பாளர்கள் நியமனம்: விஜய் அறிவிப்பு
வியாழன் 19, ஜூன் 2025 12:53:57 PM (IST)
