» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சொத்து குவிப்பு வழக்கு: குமரியில் சார் பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!
வெள்ளி 23, பிப்ரவரி 2024 3:24:53 PM (IST)

சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக குமரியில் உள்ள சார் பதிவாளர் மகள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்..
திருநெல்வேலி மாவட்டம் வி. கே. புரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளர் பொறுப்பு அலுவலராக இருப்பவர் வேலம்மாள். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திருநெல்வேலி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். அந்த வழக்கின் அடிப்படையில் இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் திருநெல்வேலி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சார்பதிவாளர் பொறுப்பு வகிக்கும் வேலம்மாளின் மகள் கிருஷ்ணவேணியின் வீடு குமரி மாவட்டம் மருங்கூர் ஊரில் உள்ளது. அங்கு குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ் தலைமையில் ஒரே நேரத்தில் இங்கும் சோதனை நடைபெற்று வருகிறது.
சோதனையில் ஏராளமான வங்கி பண பரிவர்த்தனைகள் செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சோதனை தொடர்ந்து நடந்து வருவதால் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இன்னும் கூடுதலாக வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த விபரங்கள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காலனி என்ற சொல் பொது புழக்கத்தில் இருந்து நீக்கப்படும்: பேரவையில் முதல்வர் அறிவிப்பு
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 11:58:01 AM (IST)

முதியவர்கள் சாலையை கடக்க உதவும் பெண் காவலர்கள் : பொதுமக்கள் பாராட்டு!
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 11:40:37 AM (IST)

குமரி மாவட்டத்தில் மே 1ம் தேதி மதுக்கடைகளை மூட ஆட்சியர் அழகுமீனா உத்தரவு!
திங்கள் 28, ஏப்ரல் 2025 5:01:42 PM (IST)

நன்கு பயின்று பெற்றோரின் கனவை நிறைவேற்ற வேண்டும்: மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவுரை
திங்கள் 28, ஏப்ரல் 2025 4:49:22 PM (IST)

பிளஸ்-1 மாணவனை குத்திக்கொன்ற கல்லூரி மாணவன் : குமரி அருகே பயங்கரம்!
திங்கள் 28, ஏப்ரல் 2025 12:54:30 PM (IST)

ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம்: ஆட்சியர் சுகுமார் தொடங்கி வைத்தார்!
திங்கள் 28, ஏப்ரல் 2025 12:35:26 PM (IST)
