» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ரயில்வே இரட்டை பாதையில் வடிகாலை மண்போட்டு மூடுவதை தடை செய்ய கோரிக்கை!
திங்கள் 11, டிசம்பர் 2023 11:24:19 AM (IST)
பார்வதிபுரம் ரயில்வே இரட்டை பாதையில் வடிகாலை மண்போட்டு மூடுவதை தடை செய்யக் கோரி ரயில்வேக்கு குமரி மாவட்ட பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது சம்பந்தமாக கன்னியாகுமரி மாவட்ட ரயில் பணிகள் சங்கத் தலைவரும், ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினருமான எஸ்.ஆர். ஸ்ரீராம் ரயில்வே அதிகாரிகளுக்கு கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது "நாகர்கோவில் பார்வதிபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க சமஞ்ச குளத்தில் மண்போட்டு நிரப்பி பாலம் இருவழிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இதில் தற்பொழுது இரட்டை பாதை அமைக்க மண்போட்டு நிரப்பப்படுகிறது. அதில் இரட்டை பாதை அமைக்கும் தண்டவாளத்தின் கீழ் பகுதியில் தண்ணீர் செல்லும் வடிகால் இருந்து வந்தது. அதனை தற்பொழுது வடிகால் தொடர்ந்து அமைக்காத காரணத்தினால் மழைக்காலங்களில் குளம் தண்ணீர் அடுத்த குளத்திற்கு செல்ல முடியாமல் வீடுகளுக்கு தண்ணீர் 5 அடி உயரத்திற்கு நிரம்புகின்றது.
ஆதலால் மேம்பாலத்தின் அடியே ஏற்கெனவே இருந்த வடிகாலை மீண்டும் தொடர்ந்து அமைக்கவும், தண்ணீர் ஒரு குளத்திலிருந்து மறு குளத்திற்கு எளிதில் செல்லவும் வடிகாலை உடன் அமைக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்
இது சம்பந்தமாக உதவி செயற் பொறியாளர் பழையாறு வடிநில உபகோட்டம் எழுதியுள்ள கடிதத்தில் இரயில்வே துறை மூலம் தண்ணீர் போக்கிற்கு இடையூறாக மண் போட்டு நிரப்பப்படுகிறது. இதனால் மழைக் காலங்களில் தண்ணீர் வழிந்தோட வாய்ப்பு இல்லை, ஆதலால் மண்ணை அகற்றி பழைய நிலைக்கு கொண்டு வருமாறு ரயில்வேக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)










