» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நாங்குநேரி வட்டார பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு
செவ்வாய் 28, நவம்பர் 2023 4:23:22 PM (IST)

நாங்குநேரி வட்டார பகுதிகளில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், நேரில் ஆய்வு செய்தார்.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், மூலைக்கரைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், முனைஞ்சிப்பட்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மூலைக்கரைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் இன்று (28.11.2023) மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
நாங்குநேரி வட்டம், மூலைக்கரைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் உள்ளனவா எனவும், பாம்புகடி, நாய்கடி உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளுக்கு தேவையான மருந்துகள் உள்ளனவா எனவும், நோயாளிகளுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதா எனவும் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, மூலைக்கரைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களின் கல்வித்தரம் குறித்தும், பள்ளியின் அடிப்படை வசதிகள் மற்றும் மாணவர்கள் கல்வி பயில்வதற்கு உகந்த சூழல் உள்ளதா எனவும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
அதனைத்தொடர்ந்து, முனைஞ்சிப்பட்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சியர் இன்று பார்வையிட்டு, மேலும், பணியாளர்களின் வருகைப்பதிவேடு, மருத்துவ வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தார்கள். இந்த ஆய்வின்போது, மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)










