» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாகர்கோவில் மாநகராட்சியில் ₹58.50 இலட்சம் மதிப்பீட்டில் சாலை பணிகள் துவக்கம்!

செவ்வாய் 28, நவம்பர் 2023 3:26:13 PM (IST)



நாகர்கோவில் மாநகராட்சியில் ₹58.50 இலட்சம் மதிப்பீட்டில் சாலை பணிகளை மேயர் மகேஷ் துவக்கி வைத்தார். 

நாகர்கோவில் மாநகராட்சியில்  49-வது வார்டுக்குட்பட்ட மெகராஜ் கார்டன் பகுதியில் ₹20 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி, 48-வது வார்டுக்குட்பட்ட ஆசாத் கார்டன்-2 பகுதியில் ₹25 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி, 34-வது வார்டுக்குட்பட்ட அம்மன் கோவில் தெருவில் ₹5 இலட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி,

17-வது வார்டுக்குட்பட்ட பெருமாள் நகரில் ₹3.50 இலட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 22-வது வார்டுக்குட்பட்ட பேரின்ப தெருவில் ₹5 இலட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி ஆகிய பணியினை மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் துணை மேயர் மேரி பிரின்சி லதா மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital



CSC Computer Education




Thoothukudi Business Directory