» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாகர்கோவில் மாநகராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள் : மேயர் தொடங்கி வைத்தார்

சனி 25, நவம்பர் 2023 10:39:28 AM (IST)



நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணிகளை மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

நாகர்கோவில் மாநகராட்சியில் 8-வது வார்டுக்குட்பட்ட அம்மன் கோவில் 6-வது குறுக்கு தெருவில் ரூ.2.50 லட்சம் மதிப்பில் படிக்கட்டு அமைக்கும் பணி மற்றும் 52-வது வார்டுக்குட்பட்ட தெங்கம்புதூர், புதுக்குடியிருப்பு குறுக்குசாலை, அஞ்சுகுடியிருப்பு மற்றும் பெருமாள்புரம் முதல் குளத்துவிளை செல்லும் சாலை ஆகிய பகுதிகளில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணிகளை மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

அப்போது மாமன்ற உறுப்பினர்கள் சேகர், ரமேஷ், தொழில்நுட்ப அதிகாரி பாஸ்கர், மாநகர செயலாளர் ஆனந்த், பகுதி செயலாளர் சேக் மீரான், இளைஞர் அணி செயலாளர் அகஸ்தீசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education

Arputham Hospital





Thoothukudi Business Directory