» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சென்னையில் 27 பேரை கடித்த நாய்க்கு ரேபிஸ் உறுதி : பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
வெள்ளி 24, நவம்பர் 2023 10:25:26 AM (IST)
சென்னை ராயபுரம் பகுதியில் 27 பேரை கடித்த நாய்க்கு ரேபிஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீப காலங்களில் நகரங்களின் பல பகுதிகளில் தெரு நாய்களின் நடமாட்டம் அதிகமாக உள்ள நிலையில் நாய்கள் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட வேண்டும் என் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை ராயபுரம் பகுதியில் நாய் ஒன்று நேற்று ஒருநாளில் மட்டும் 20க்கும் மேற்பட்டோரை கடித்ததால் பெரும் பரபரப்பு எழுந்தது.
மக்களை அச்சுறுத்தி வந்த அந்த நாய் பிடிக்கப்பட்ட நிலையில் அதற்கு ரேபிஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் நாயால் கடி வாங்கிய 27 பேரும் 5 டோஸ் தடுப்பூசிகள் கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாயை போலவே மற்ற நாய்களுக்கும் ரேபிஸ் தொற்று பரவியிருக்கலாம் என மக்களிடையே அச்சம் எழுந்துள்ள நிலையில் தெரு நாய்களிடையே ரேபிஸ் பரவுவதை கண்டறிந்து கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)










