» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தனியார் நிதி நிறுவனம் ரூ.20 இலட்சம் வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு!
வெள்ளி 2, ஜூன் 2023 8:28:31 PM (IST)
சேவை குறைபாடு காரணமாக தனியார் நிதி நிறுவனம் ரூ.20 இலட்சம் வழங்க குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியைச் சார்ந்த கிருஷ்டி பீனா என்பவருடைய கணவர் அணில் குமார் என்பவர் நாகர்கோயிலிலுள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வீட்டுக் கடன் பெற்றிருந்தார். அதோடு இந்த கடனுக்காக ரூ.20 இலட்சத்திற்க்கு காப்பீடு செய்திருந்தார். அதன் பிறகு தவணைகளை முறையாக செலுத்தியிருந்தார். திடீரென அணில் குமார் இறந்து விட்டார். இதன் பிறகும் கடனுக்கான தவணைகளை தனியார் நிதி நிறுவனம் கடன்தாரர் வங்கிக் கணக்கில் இருந்து பிடித்தம் செய்து வந்தது.
இவ்வாறு பிடிப்பதை நிறுத்தம் செய்யுமாறும், கடன் பெற்றவர் இறந்து விட்டதால் காப்பீடுத் திட்டத்தின் மூலம் பணத்தை பெற்று கடனை சரி செய்யுமாறும் கிருஷ்டி பீனா தனியார் நிதி நிறுவனத்திடம் கேட்டுள்ளார். ஆனால் எந்த தீர்வும் கிடைக்கவில்லை. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான நுகர்வோர்கள் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் ஆ.சங்கர் ஆகியோர் தனியார் நிதி நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு காப்பீடுத் தொகை ரூ.20,00,000, மன உளைச்சலுக்கான நஷ்ட ஈடு ரூ.10,000, வழக்கு செலவு தொகை ரூ.5,000 ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)










