» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ரயிலில் அடிபட்டு தந்தை-குழந்தை பலி : விபத்தா? தற்கொலையா? போலீஸ் விசாரணை!!
சனி 1, ஏப்ரல் 2023 11:26:53 AM (IST)
நெல்லை அருகே ரயிலில் அடிபட்டு தந்தையும், 5 வயது குழந்தையும் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை அருகே மேலமுன்னீர்பள்ளம் அன்னைநகர் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் நேற்று இரவில் 2 பேர் இறந்து கிடந்தனர். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து முன்னீர்பள்ளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது, அங்கு ஒரு வாலிபரும், ஒரு குழந்தையும் பிணமாக கிடந்ததை கண்டனர். இதுெதாடர்பாக நாகர்கோவில் ரயில்வே போலீசருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் மேலமுன்னீர்பள்ளம் அன்னைநகரை சேர்ந்தவர் சிவா என்ற உச்சிமாகாளி (32). கட்டிட தொழிலாளி. இவருடைய 5 வயது குழந்தை முத்துசெல்வன்.
நேற்று இரவு சிவா தனது குழந்தை முத்துசெல்வனை அழைத்துக்கொண்டு அன்னைநகர் ரயில்வே தண்டவாளம் அருகில் உள்ள தனக்கு ெசாந்தமான இடத்தை பார்க்க சென்றார். அப்போது, தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த ரயிலில் அடிபட்டு சிவா, குழந்தை முத்துசெல்வன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். இதில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே 2 பேரும் பலியானது தெரியவந்தது.
எனினும் அவர் தனது குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து அறிந்த அவரது உறவினர்கள், அப்பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் 2 பேரின் உடல்களை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இதுதொடர்பாக நாகர்கோவில் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குளிர்பானத்தில் விஷம் கலந்து காதலனை கொலை செய்த வழக்கு கிரீஷ்மாவுக்கு ஜாமீன் மறுப்பு!
சனி 3, ஜூன் 2023 3:27:51 PM (IST)

கூடங்குளம் அணுக்கழிவுகளை அகற்ற கோரி மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
சனி 3, ஜூன் 2023 12:50:00 PM (IST)

கனவில் கூட நினைக்கவில்லை!!- ரயில் விபத்தில் தப்பிய தென்காசி பயணி!
சனி 3, ஜூன் 2023 12:19:10 PM (IST)

ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
சனி 3, ஜூன் 2023 12:12:32 PM (IST)

செல்போன் கடை ரூ.15,000 நஷ்ட ஈடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு!
சனி 3, ஜூன் 2023 11:16:24 AM (IST)

தமிழகத்தில் இன்று துக்கம் அனுசரிப்பு: கலைஞர் நூற்றாண்டு விழா தொடக்கப் பொதுக்கூட்டம் ரத்து
சனி 3, ஜூன் 2023 10:14:14 AM (IST)
