» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அதிமுகவுக்கு துரோகம் செய்தவர் ஓ.பன்னீர் செல்வம்: ஜெயக்குமார் விமர்சனம்
ஞாயிறு 19, மார்ச் 2023 7:52:27 PM (IST)
அதிமுகவுக்கு துரோகம் செய்தவர் ஓ.பன்னீர்செல்வம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், டிடிவி தினகரன் தேனியில் போட்டியிடவில்லை என்றால் ஓ.பன்னீர்செல்வம் யாரென்றே தெரிந்திருக்காது, ஜெயலலிதா மரணத்தில் விசாரணை ஆணையம் கேட்டது ஓ.பன்னீர்செல்வம்தான், ஆணையம் பலமுறை சம்மன் அனுப்பியும் ஓபிஎஸ் ஆஜராகாமல் இறுதியில்தான் ஆஜரானார். கடைசியில் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறிவிட்டார்
மக்களவை தேர்தலில் தன் மகனை வெற்றி பெற வைக்க பல கோடி செலவு செய்தவர். ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து முரணான கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். தன்னுடைய சுயநலத்துக்காக மட்டுமே ஓபிஎஸ் செயல்பட்டு வருகிறார். கட்சி நலனுக்காக ஓபிஎஸ் எப்போது பேசியிருக்கிறார்?. அதிமுக நலனுக்காக ஓ.பன்னீர்செல்வம் பேசியதோ, செயல்பட்டதோ இல்லை. நிதானத்தை இழந்து விரக்தியில் கட்சிக்கு எதிராக ஓபிஎஸ் பேசி வருகிறார். பிக்பாக்கெட் என்று ஓபிஎஸ் பேசுவது அரசியல் நாகரீகமா? கடந்த காலத்தில் என்னிடம் இருந்த நிதித் துறையை பறித்துக்கொண்டவர் ஓ.பன்னீர்செல்வம்தான் எனக் குறிப்பிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இளம்பெண்ணிடம் செயின் பறிப்பு: 4 மணி நேரத்தில் கொள்ளையர்கள் கைது
சனி 1, ஏப்ரல் 2023 3:25:20 PM (IST)

குறைந்த விலையில், அதிவேக இணைய சேவை : தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர்
சனி 1, ஏப்ரல் 2023 3:00:22 PM (IST)

விஜய் யேசுதாஸ் வீட்டில் ரூ.60 லட்சம் நகைகள் திருட்டு: தனிப்படை போலீசார் விசாரணை!
சனி 1, ஏப்ரல் 2023 12:09:57 PM (IST)

கோவில்பட்டி உட்பட 8 புதிய மாவட்டங்களை உருவாக்க திட்டம் : அமைச்சர் தகவல்..!
சனி 1, ஏப்ரல் 2023 11:51:17 AM (IST)

ரயிலில் அடிபட்டு தந்தை-குழந்தை பலி : விபத்தா? தற்கொலையா? போலீஸ் விசாரணை!!
சனி 1, ஏப்ரல் 2023 11:26:53 AM (IST)

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தூத்துக்குடி ஆசிரியை திடீர் மரணம்
சனி 1, ஏப்ரல் 2023 10:45:27 AM (IST)
