» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அகஸ்தியர் அருவிக்கு செல்ல தடை நீக்கம் : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
புதன் 1, பிப்ரவரி 2023 11:40:11 AM (IST)

முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நிறைவு பெற்றதையடுத்து அகஸ்தியர் அருவிக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.
முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அம்பை, பாபநாசம், கடையம், முண்டந்துறை வனச்சரகங்களில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி, கடந்த 22ம் தேதி முதல் நேற்று முன்தினம் (27ம் தேதி) வரை நடந்தது. 60 கல்லூரி மாணவர்கள், 80 வேட்டை தடுப்பு காவலர்கள், 40 தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். இதையொட்டி அகஸ்தியர் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் கணக்கெடுப்பு பணி நிறைவடைந்ததையடுத்து நேற்று முதல் அகஸ்தியர் அருவிக்கு செல்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் அனுமதி வழங்கினர். காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு அரசு பேருந்துகளில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முதல் சொந்த வாகனங்களில் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இளம்பெண்ணிடம் செயின் பறிப்பு: 4 மணி நேரத்தில் கொள்ளையர்கள் கைது
சனி 1, ஏப்ரல் 2023 3:25:20 PM (IST)

குறைந்த விலையில், அதிவேக இணைய சேவை : தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர்
சனி 1, ஏப்ரல் 2023 3:00:22 PM (IST)

விஜய் யேசுதாஸ் வீட்டில் ரூ.60 லட்சம் நகைகள் திருட்டு: தனிப்படை போலீசார் விசாரணை!
சனி 1, ஏப்ரல் 2023 12:09:57 PM (IST)

கோவில்பட்டி உட்பட 8 புதிய மாவட்டங்களை உருவாக்க திட்டம் : அமைச்சர் தகவல்..!
சனி 1, ஏப்ரல் 2023 11:51:17 AM (IST)

ரயிலில் அடிபட்டு தந்தை-குழந்தை பலி : விபத்தா? தற்கொலையா? போலீஸ் விசாரணை!!
சனி 1, ஏப்ரல் 2023 11:26:53 AM (IST)

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தூத்துக்குடி ஆசிரியை திடீர் மரணம்
சனி 1, ஏப்ரல் 2023 10:45:27 AM (IST)
