» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழ்நாடு காது கேளாதோர் உரிமை நலச்சங்கம் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!

திங்கள் 24, ஆகஸ்ட் 2026 10:14:17 AM (IST)



தமிழ்நாடு காது கேளாதோர் உரிமை நலச்சங்கத்தின் தூத்துக்குடி மாவட்டக் குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
     
தூத்துக்குடி மாவட்டக் குழு காது கேளாதோர் அமைப்பு கூட்டம் தமிழ்நாடு காது கேளாதோர் உரிமை நலச்சங்கம் சார்பில் புனித மரியன்னை மழலையர் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு காது கேளாதோர் உரிமை நலச்சங்கத்தின் மாநில தலைவர் சுரேஷ் மாநில செயலாளர் சொர்ணவேல் ஆகியோர் தலைமை தாங்கினர்.
     
கூட்டத்தில் முன்னாள் அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தின் மாநில தலைவர்  மருதப்பெருமாள், மாநில பொதுச்செயலாளர் ஜெயராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினாா்கள். தூத்துக்குடி மாவட்டக் குழு காது கேளாதோர் அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில் மாவட்டத் தலைவராக பேச்சிமுத்து, மாவட்டச் செயலாளராக தங்கராஜ், பொருளாளராக சிவன்ராஜ்,  துணைத் தலைவராக சின்னத்தம்பி, துணைச் செயலாளராக தாமஸ் போஸ்கோ, ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் மேலும் செயற்குழு உறுப்பினர்களாக அரிராமன் ராணி, சரவணன், நிக்சன், மகாலட்சுமி, பிரவீனா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனா். காது கேளாதோர் மக்களின் உரிமைகள், நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற உறுதியுடன் கூட்டம் நிறைவுற்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory