» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் 80ஆவது சுதந்திர தின விழா

சனி 15, ஆகஸ்ட் 2026 12:54:17 PM (IST)

DCWIndep.jpg

சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவன வளாகத்தில், 80ஆவது சுதந்திர தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

சாகுபுரம் டி.சி.டபிள்யூ  நிறுவனத்தில் 80வது சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு நிறுவனத்தின் மூத்த உதவி தலைவர் ஜி. ஸ்ரீநிவாசன் தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.

விழாவையொட்டி, ஒவ்வொரு ஆண்டும்  இரத்ததானம் செய்து வரும் நிறுவனத்தின் பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும், ஆலை பணியிடங்களில் பாதுகாப்பு நடைமுறைகளை சிறப்பாகக் கடைப்பிடித்து, அவசர காலங்களில் சிறப்பாகச் செயல்பட்ட பணியாளர்களுக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.

குறிப்பாக, 70 முறைக்கு மேல் இரத்ததானம் செய்து சமூகப் பணியில் சிறப்பாகப் பங்களித்து வரும் ஐஎன்டியூசி செயலாளர் பி.எஸ். முருகனுக்கு சிறப்புப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. விழாவில் நிறுவனத்தின் உதவி தலைவர்கள், மூத்த பொதுமேலாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், பணியாளர்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை நிறுவனத்தின் பாதுகாப்புத் துறையினர் சிறப்பாகச் செய்திருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory