» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை: தூத்துக்குடியில் பரிதாபம்!

வெள்ளி 17, ஏப்ரல் 2026 10:25:31 AM (IST)

தூத்துக்குயில் கடன் பிரச்சினை காரணமாக வாலிபர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 2-வது தெருவைச் சேர்ந்தவர் முத்துசாமி மகன் பாலமுருகன் (36). இவருக்கு பாலமுருகனுக்கு கடந்த சில நாட்களாக கடுமையான கடன் பிரச்சினை இருந்து வந்ததாகத் தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாடியில் உள்ள அறையில் சீலிங் ஃபேனில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

சிறிது நேரம் கழித்து அறைக்கு வந்த அவரது மனைவி, பாலமுருகன் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். உடனே அருகில் இருந்தவர்களின் உதவியுடன் அவரை மீட்டு, ஆட்டோ மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், பாலமுருகன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வடபாகம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital





Thoothukudi Business Directory