» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கத்தி முனையில் முதியவரிடம் பைக், செல்போன் பறிப்பு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

வியாழன் 30, ஜனவரி 2025 8:53:59 PM (IST)

சாத்தான்குளம் அருகே முதியவரை தாக்கி பைக், பணம், மற்றும் செல்போனை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம்அருகேயுள்ள இட்டமொழி தெற்கு தெருவை சேர்ந்தவர் வடிவேல்(60). இவர் தனியார்நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு திசையன்விளை சென்று விட்டு தஞ்சை நகரம் வழியாக பைக்கில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அங்குள்ள தனியார் கல்லூரி அருகே வந்தபோது மர்ம நபர்கள், அவரை வழிமறித்து கத்திமுனையில் மிரட்டி இருந்து பைக், செல்போன் மற்றும் ரூ.2 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்துச் சென்றனர். 

இதுகுறித்த புகாரின்பேரில் தட்டார்மடம் உதவி ஆய்வாளர் பொன்னு முனியசாமி வழக்கு பதிந்து வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





New Shape Tailors

Arputham Hospital



Thoothukudi Business Directory