» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கண்மாயில் மீன்பிடிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலி

வியாழன் 30, ஜனவரி 2025 5:38:26 PM (IST)

உடன்குடி அருகே கண்மாயில் மீன்பிடிக்க சென்றவர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகேயுள்ள பிச்சிவிளை காலனியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சொக்கலிங்கம் (60). இவர் நேற்று காலை உடன்குடியில் உள்ள கண்மாயில் மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக கண்மாயில் தவறி விழுந்த அவர் நீரில் மூழ்கி இறந்தார். சம்பவம் குறித்து குலசேகரன்பட்டினம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital


New Shape Tailors




Thoothukudi Business Directory