» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புளியமரத்தில் தொங்கிய ஆண் சடலம்: போலீஸ் விசாரணை!

வியாழன் 30, ஜனவரி 2025 5:33:03 PM (IST)

குலசேகரன்பட்டினம் அருகே புளியமரத்தில் தொங்கிய ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருகே செட்டியாபத்து கிராமம் ஐந்துவீட்டு சுவாமி நகரைச் சேர்ந்தவர் கருப்பன் மகன் உமையன் (55). கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு ஆறுமுக கனி என்ற மனைவியும், 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை உமையன் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. 

இந்நிலையில் இன்று காலை ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள புளியமரத்தில் உமையன் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்து குலசேகரன்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு எதுவும் காரணம் உள்ளதா என்பது குறித்து இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors



Arputham Hospital





Thoothukudi Business Directory