» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
புளியமரத்தில் தொங்கிய ஆண் சடலம்: போலீஸ் விசாரணை!
வியாழன் 30, ஜனவரி 2025 5:33:03 PM (IST)
குலசேகரன்பட்டினம் அருகே புளியமரத்தில் தொங்கிய ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருகே செட்டியாபத்து கிராமம் ஐந்துவீட்டு சுவாமி நகரைச் சேர்ந்தவர் கருப்பன் மகன் உமையன் (55). கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு ஆறுமுக கனி என்ற மனைவியும், 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை உமையன் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் இன்று காலை ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள புளியமரத்தில் உமையன் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்து குலசேகரன்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு எதுவும் காரணம் உள்ளதா என்பது குறித்து இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ரயிலை கவிழ்க்க சதி திட்டம் : 2 பேர் கைது
திங்கள் 24, பிப்ரவரி 2025 8:46:45 AM (IST)

நாய் குறுக்கே வந்ததால் விபத்து: முதியவர் சாவு
திங்கள் 24, பிப்ரவரி 2025 8:41:48 AM (IST)

பைக்குகள், செல்போன்கள் திருட்டு : 7 பேர் கைது
திங்கள் 24, பிப்ரவரி 2025 8:33:16 AM (IST)

ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
திங்கள் 24, பிப்ரவரி 2025 8:24:23 AM (IST)

தாமிபரணி நதியை பாதுகாக்க வேண்டும் : எஸ்.டி.பி.ஐ பொதுக்கூட்டத்தில் தீர்மானம்
ஞாயிறு 23, பிப்ரவரி 2025 8:42:44 PM (IST)

திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல் : 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!
ஞாயிறு 23, பிப்ரவரி 2025 7:30:35 PM (IST)
