» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் தை அமாவாசை சிறப்பு பூஜை

வியாழன் 30, ஜனவரி 2025 5:10:47 PM (IST)



தூத்துக்குடியில் தை அமாவாசையை முன்னிட்டு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை ஆகிய நாட்களில் இந்துக்கள் தங்கள் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இந்நிலையில் தை அமாவாசை தினத்தை முன்னிட்டு நேற்று தூத்துக்குடியில் உள்ள கடற்கரையில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். 

தை அமாவாசையை முன்னிட்டு பணியின் போது உயிரிந்த ஊழியர்கள் மற்றும் பயணத்தின் போது உயிரிழந்த ஆன்மாக்களுக்காக தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் பகுதியில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தை அமாவாசை சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அரசு முன்பதிவு மைய ஒப்பந்த தாரர் ராஜேந்திரன் மற்றும் எஸ்இடிசி, டிஎன்எஸ்டிசி ஊழியர்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors




Arputham Hospital



Thoothukudi Business Directory