» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் பத்ர தீப விழா: திரளான பக்தர்கள் தரிசனம்
வியாழன் 30, ஜனவரி 2025 10:56:55 AM (IST)

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு பத்ர விழா வழிபாடு நடைபெற்றது.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு நேற்று அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து, திருவனந்தல் பூஜை, திருப்பள்ளி எழுச்சி பூஜை நடந்தது. காலை 10.30 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. மாலை 5 மணிக்கு சுவாமி, அம்பாள் மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.
தொடர்ந்து 6 மணிக்கு உற்சவ மூர்த்தி சன்னதியில் வைக்கப்பட்டிருந்த பிரதான விளக்கில் தீபம் ஏற்றப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கோவில் வளாகம் முழுவதும் வைக்கப்பட்டிருந்த 10 ஆயிரத்து 8 தீபங்களை பெண் பக்தர்கள் ஏற்றி வழிபாடு செய்தனர். விநாயகர், சிவன் உள்ளிட் சுவாமி உருவங்கள் வரைந்து அதனை சுற்றி விளக்குகளை ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர். இரவு 8 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதி உலா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்!
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 9:23:24 PM (IST)

மூத்த பெருமக்கள் நல்வாழ்விற்கு அதிக நிதி ஒதுக்கீடு : தமிழக முதல்வருக்கு கோரிக்கை!
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:31:01 PM (IST)

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி: அழகர் பப்ளிக் பள்ளி அணி வெற்றி
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:08:36 PM (IST)

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியிடங்கள் : பிப்.28க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 4:29:10 PM (IST)

ரேஷன் கடைகளில் விரல் ரேகைகளை பதிவு செய்ய வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 3:59:30 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் பிப்.26ல் மகா சிவராத்திரி விழா
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 3:33:55 PM (IST)
