» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் பத்ர தீப விழா: திரளான பக்தர்கள் தரிசனம்

வியாழன் 30, ஜனவரி 2025 10:56:55 AM (IST)



கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு  பத்ர விழா வழிபாடு நடைபெற்றது.

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு நேற்று அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து, திருவனந்தல் பூஜை, திருப்பள்ளி எழுச்சி பூஜை நடந்தது. காலை 10.30 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. மாலை 5 மணிக்கு சுவாமி, அம்பாள் மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.

தொடர்ந்து 6 மணிக்கு உற்சவ மூர்த்தி சன்னதியில் வைக்கப்பட்டிருந்த பிரதான விளக்கில் தீபம் ஏற்றப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கோவில் வளாகம் முழுவதும் வைக்கப்பட்டிருந்த 10 ஆயிரத்து 8 தீபங்களை பெண் பக்தர்கள் ஏற்றி வழிபாடு செய்தனர்.  விநாயகர், சிவன் உள்ளிட் சுவாமி உருவங்கள் வரைந்து அதனை சுற்றி விளக்குகளை ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர். இரவு 8 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதி உலா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors



Arputham Hospital






Thoothukudi Business Directory