» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வியாபாரி உள்ளிட்ட 2 பேருக்கு சரமாரி வெட்டு: நண்பருக்கு போலீஸ் வலைவீச்சு
வியாழன் 30, ஜனவரி 2025 8:34:31 AM (IST)
கோவில்பட்டியில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் வியாபாரி உள்ளிட்ட 2 பேரை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிய நண்பரை போலீசார் தேடிவருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பாரதி நகர் 4-வது தெருவை சேர்ந்த ராமலிங்கம் மகன் முருகன் (44). காய்கறி வியாபாரி. இவர் பழைய காய்கறி மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வந்தார். தற்போது கடைகள் இடிக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடந்து வருவதால், லோடு ஆட்டோவில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது உறவினர் அதே பகுதியை சேர்ந்த பாலு மகன் சங்கரலிங்கம் (48). கூலி தொழிலாளி.
இவரது நண்பர் தச்சுத் தொழிலாளியான சங்கரநாராயணன் மகன் ஜெயபால் என்ற பாலசுப்பிரமணி (42). 3 பேரும் நேற்று முன்தினம் இரவு 3 பேரும் தெற்கு பஜாரில் உள்ள ஒரு கடையின் மாடியில் அளவுக்கு அதிகமாக மது குடித்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாய்த் தகராறு முற்றியதில், கை கலப்பாக மாறியுள்ளது. அப்போது பாலசுப்பிரமணி மறைத்து வைத்திருந்த கத்தியால் முருகனை சரமாரியாக வெட்டியுள்ளார்.
அப்போது தடுக்க முயன்ற சங்கரலிங்கத்தையும் அவர் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் காயம் அடைந்த இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் முருகன் தீவிர சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து வியாபாரி உள்ளிட்ட 2பேரை வெட்டி விட்டு தப்பி ஓடிய பாலசுப்பிரமணியை தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்!
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 9:23:24 PM (IST)

மூத்த பெருமக்கள் நல்வாழ்விற்கு அதிக நிதி ஒதுக்கீடு : தமிழக முதல்வருக்கு கோரிக்கை!
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:31:01 PM (IST)

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி: அழகர் பப்ளிக் பள்ளி அணி வெற்றி
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:08:36 PM (IST)

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியிடங்கள் : பிப்.28க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 4:29:10 PM (IST)

ரேஷன் கடைகளில் விரல் ரேகைகளை பதிவு செய்ய வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 3:59:30 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் பிப்.26ல் மகா சிவராத்திரி விழா
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 3:33:55 PM (IST)
