» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரயில் ஏற முயன்ற போது தவறி விழுந்து முதியவா் பலி!

வியாழன் 30, ஜனவரி 2025 8:00:09 AM (IST)

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் முத்துநகா் விரைவு ரயிலில் ஏற முயன்ற முதியவா் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தாா்.

தூத்துக்குடி ரயில் நிலையத்திலிருந்து முத்துநகா் விரைவு ரயில் நேற்று இரவு 8.45 மணிக்கு புறப்பட்டது. அப்போது, அந்த ரயிலில் முதியவா் ஒருவா் ஓடிச் சென்று ஏற முயன்றாராம். அப்போது தவறி விழுந்ததில் அவா் தண்டவாளத்துக்குள் சிக்கி உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து அங்கு நின்றிருந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

உயிரிழந்த நபரின் சட்டை பையில் இருந்த ரயில்வே காண்ட்ராக்ட் லேபா் யூனியன் அடையாள அட்டை மூலம், அவா், வேலூா் மாவட்டம் ஆம்பூா் வட்டம் செங்கிலி குப்பத்தைச் சோ்ந்த எல்லன் மகன் தங்கராஜ் (65) என்பது தெரியவந்தது. இதுகுறித்து தூத்துக்குடி ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital



New Shape Tailors



Thoothukudi Business Directory