» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தை அமாவாசை: முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்!
புதன் 29, ஜனவரி 2025 8:48:15 PM (IST)

தை அமாவாசை முன்னிட்டு முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி ஆற்றங்கரையில் முறப்பநாடு மிக முக்கிய ஆன்மிக தலமாகும். தெட்சன காசி என்று இந்த இடத்தினை போற்றுவர். வடக்கிருந்து தெற்கு நோக்கி தாமிரபரணி பாயும் புண்ணிய பூமி. இவ்விடத்தில் நவகைலாயங்களில் நடு கைலாயம் உள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு மகா புஷ்கரத்தினையொட்டி இவ்விடத்தில் 6 லட்சம் «ப்ர் புனித நீராடினார்கள்.
இந்திய அளவில் முக்கிய நதிகளின் தீர்த்தக்கட்டங்களில் முறப்பநாடு காசி தீர்த்தக்கட்டமும் பிரமாதமாக பேசப்படுகிறது. இங்கு தை அமாவாசையை முன்னிட்டு அதிகாலை சிவகாமி சமேத கைலாசநாதர் கோயில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிசேகம் நடந்தது. அதன் பின் அலங்கார பூஜை நடந்தது. 5.30 மணிக்கே முன்னோர்களுக்கு தர்பணம் கொடுக்க ஆயிரக்கணக்கான மக்கள் கூடி விட்டார்கள். முன்னோர்களுக்கு தர்பணம் கொடுக்க 50க்கு மேற்பட்ட புரோகிதர்கள் ஆற்றங்கரையில் கூடியிருந்தனர்.
கைலாசநாதர் ஆலயத்தில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமியை வணங்கினர். இதனால் முறப்பநாட்டின் ஊருக்கு வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. எனவே முறப்பநாடு போலிசார் போக்குவரத்தினை சீர் செய்ய வாகனங்களை மெயின்ரோட்டில் நிறுத்திவிட்டனர். தர்பணம் செய்து விட்டு அகத்தி கீரையை மாடுகளுக்குகொடுக்க வேண்டும் என ஐதீகம். எனவே பல இடங்களில் அகத்தி கீரைகடைகள் பெருகின.
சுற்று சூழல் பாதுகாப்பு இயக்கதினை சேர்ந்த கார்த்திகேயன், ராஜா ஆகியோர் கை ஒலிபெருக்கி மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பிளாஸ்டிக் கைகளையும் துணிகளையும் ஆற்றில் போட விடாமலும் பணிசெய்ய வாய்ப்பு கிடைத்தது.
எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தாமிரபரணி முக்கியத்துவம் குறித்தும், நதியை மாசுப்படுத்தாமல் பக்தர்கள் புண்ணியத்தினை கொண்டு செல்லவேண்டும் என பரப்புரை செய்தார். பஞ்சாயத்து உதவியாளர் பாலாஜி அவர்களும் பிளாஸ்டிக் முழுவதையும் பூஜை செய்யும் அர்ச்சகர் கைபற்றிவிட வேண்டும். பிளாஸ்டிக்கை ஆற்றுக்குள் விடக்கூடாது என திட்டம் தீட்டி செயல்படுத்தினார்கள்.
ஆண்டுக்கு ஆண்டு பக்தர்கள் கூட்டம் பெருகி வரும் காரணத்தினால் வருங்காலத்தில் பக்தர்கள் நீராடுவதை மனதில் கொண்டு இந்த பகுதியில் தாமிரபரணி ஆற்றில் வளர்ந்திருக்கும் முள்செடிகளை அகற்றி, படித்துறையை சீராக அமைத்து தரவேண்டும்என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்!
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 9:23:24 PM (IST)

மூத்த பெருமக்கள் நல்வாழ்விற்கு அதிக நிதி ஒதுக்கீடு : தமிழக முதல்வருக்கு கோரிக்கை!
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:31:01 PM (IST)

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி: அழகர் பப்ளிக் பள்ளி அணி வெற்றி
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:08:36 PM (IST)

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியிடங்கள் : பிப்.28க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 4:29:10 PM (IST)

ரேஷன் கடைகளில் விரல் ரேகைகளை பதிவு செய்ய வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 3:59:30 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் பிப்.26ல் மகா சிவராத்திரி விழா
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 3:33:55 PM (IST)
