» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு தொடக்க விழா அணி வகுப்பு : திரளான தொண்டர்கள் பங்கேற்பு
திங்கள் 7, அக்டோபர் 2024 8:46:36 AM (IST)

திருச்செந்தூரில் ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு தொடக்க விழா மற்றும் விஜயதசமியை முன்னிட்டு நேற்று அணி வகுப்பு ஊர்வலம், பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தொண்டர்கள் சீருடையில் பங்கேற்றனர்.
ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு தொடக்க விழா மற்றும் விஜயதசமியை முன்னிட்டு நேற்று மாலையில் திருச்செந்தூர் மையிலப்பபுரம் தெருவில் இருந்து அணிவகுப்பு ஊர்வலம் தொடங்கியது. இந்த ஊர்வலத்திற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி. மாசானமுத்து தலைமை தாங்கினார்.
இந்த ஊர்வலம் உள்மாட வீதி, பந்தல் மண்டபம், சன்னதி தெரு, பள்ளத்தெரு, சபாபதிபுரம் தெரு, புளியடித்தெரு, தாலுகா ஆபீஸ் ரோடு, நாடார் தெரு, சலவையாளர் தெரு, வெயிலுகந்தம்மன் கோவில் தெரு, ஜீவாநகர், பட்டர்குளம் தெரு வழியாக கல்யாணசுந்தரம் விநாயகர் கோவில் தெருவை சென்றடைந்தது. இந்த ஊர்வலத்தில் சுமார் 200 தொண்டர்கள் சீருடையில் பங்கேற்றனர்.
பின்னர் கல்யாணசுந்தரம் விநாயகர் கோவில் தெருவில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, நகர தலைவர் நாராயணன் தலைமை தாங்கினார். ராஷ்ட்ரிய சேவா பாரதி அகில பாரத பொறுப்பாளர் பத்மகுமார் ‘தற்கால சூழலில் ஹிந்துத்துவா' என்ற புத்தகத்தை வெளியிட்டு, சிறப்புரையாற்றினார்.
இந்த ஊர்வலம், பொதுக்கூட்டத்திற்கு தூத்துக்குடி தலைமையிடத்து கூடுதல் போலீஸ் கண்காணிப்பாளர் ஆறுமுகம் தலைமையில் துணை கண்காணிப்பாளர்கள் வசந்தராஜ் (திருச்செந்தூர்), ராமகிருஷ்ணன் (ஸ்ரீவைகுண்டம்) ஆகியோர் மேற்பார்வையில் 350 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாஜக தலைவர் அண்ணாமலை பிரஸ் கிளப் நிர்வாகிகள் வரவேற்பு
புதன் 12, மார்ச் 2025 9:21:13 PM (IST)

தூத்துக்குடியில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலி
புதன் 12, மார்ச் 2025 9:16:42 PM (IST)

தூத்துக்குடியில் 151பேருக்கு கணினி பட்டா: அமைச்சர் பி.கீதாஜீவன் வழங்கினார்.
புதன் 12, மார்ச் 2025 7:54:20 PM (IST)

மாணவர்களிடையே சாதிய உணர்வுகளை விதைக் கூடிய யாராக இருந்தாலும் நடவடிக்கை: ஆட்சியர்
புதன் 12, மார்ச் 2025 7:43:07 PM (IST)

கற்குவேல் அய்யனார் கோவிலில் ராஜகோபுரம் திருப்பணிக்கு அடிக்கல் நாட்டு விழா!
புதன் 12, மார்ச் 2025 5:44:38 PM (IST)

பள்ளி மாணவரின் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்: பெரியாரிய உணர்வாளர்கள்
புதன் 12, மார்ச் 2025 5:39:39 PM (IST)
