» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் - நெல்லை பயணிகள் ரயில் 5 நாட்கள் ரத்து : தெற்கு ரயில்வே தகவல்

வியாழன் 3, அக்டோபர் 2024 12:03:03 PM (IST)

தண்டவாளம் புதுப்பிக்கும் பணி காரணமாக திருச்செந்தூர் - நெல்லை பயணிகள் ரயில் 5 நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "திருச்செந்தூர்-நெல்லை இடையே தினமும் பயணிகள் ரயில் (வண்டி எண் 06674/06409) இயக்கப்பட்டு வருகிறது. நெல்லையில் தண்டவாளம் புதுப்பிக்கும் பணி காரணமாக இந்த ரயில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 8-ந் தேதி வரை 5 நாட்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இதே போன்று திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு தினமும் இரவு 8.25 மணிக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. திருச்சி மண்டலத்தில் ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 6, 8, 10-ந் தேதிகளில் இரவு 8.25 மணிக்கு பதிலாக இரவு 10.35 மணிக்கு புறப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

இளம்பெண் திடீர் மாயம்: போலீஸ் விசாரணை!

செவ்வாய் 11, மார்ச் 2025 11:14:38 AM (IST)

Sponsored Ads




Arputham Hospital


New Shape Tailors


CSC Computer Education



Thoothukudi Business Directory