» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கிரேன் ஆபரேட்டருக்கு அரிவாள் வெட்டு: நண்பர்கள் 2பேர் கைது!
புதன் 29, மே 2024 10:52:26 AM (IST)
தூத்துக்குடியில் கிரேன் ஆபரேட்டரை அரிவாளால் வெட்டிய அவரது நண்பர்கள் 2பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி பாத்திமா நகரை சேர்ந்தவர் இருதயராஜ் மகன் விஜய் (28). கிரேன் ஆபரேட்டராக வேலைப் பார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த விமல் மகன் வினோத் (22). இப்ராஹிம் மகன் ரகுமான் (27) இவர்கள் 3 பேரும் நண்பர்கள். இந்நிலையில் நேற்று நண்பர்கள் மூவரும் மது குடித்தபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த வினோத், ரகுமான் ஆகிய இருவரும் சேர்ந்து விஜயை அரிவாளால் வெட்டினார்களாம். இதில காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் அங்குத்தாய் வழக்குப் பதிந்து வினோத், ரகுமான் ஆகிய 2பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மாரிமுத்துமே 29, 2024 - 06:00:53 PM | Posted IP 162.1*****