» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மழைக்காக ஒதுங்கி நின்றவர் மின்னல் தாக்கி பலி : கோவில்பட்டி அருகே பரிதாபம்!

வெள்ளி 10, மே 2024 7:43:34 PM (IST)

கோவில்பட்டி அருகே மழைக்காக மரத்தின் கீழ் ஒதுங்கி நின்றவர் மின்னல் தாக்கி பரிதாபமாக இறந்தார். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியில் இன்று மாலை பலத்த காற்று இடி மின்னலுடன் மழை பெய்தது. அப்போது நெல்லையில் இருந்து விருதுநகருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஊரணி பட்டியைச் சேர்ந்த ராஜ மாணிக்கம்(55) என்பவர் நாலாட்டின்புதூர் பகுதியில் மழைக்காக சாலைப் பகுதியில் உள்ள மரத்தின் கீழ் ஓரமாக நின்று உள்ளார். 

அப்போது திடீரென இடி மின்னல் தாக்கியதில் ராஜமாணிக்கம் சம்பவ இடத்திலேயே பரிதாமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து நாலாட்டின்புதூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொ) கிங்ஸ்லி தேவ் ஆனந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory