» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காவல்துறை சார்பில் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளருக்கு இறுதி அஞ்சலி

வெள்ளி 10, மே 2024 5:39:39 PM (IST)



தூத்துக்குடியில் விபத்தில் இறந்த ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளருக்கு மாவட்ட காவல்துறை சார்பில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற தூத்துக்குடி தட்டாப்பறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வர்த்தகரெட்டிபட்டி வடக்கு தெருவைச் சேர்ந்த முத்துச்சாமி மகன் மந்திரமூர்த்தி (66) அவர்கள் நேற்று (09.05.2024) தூத்துக்குடி புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாகைகுளம் சுங்கச்சாவடி அருகே இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்தார்.

காவல்துறை தலைமை இயக்குநரால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை குறிப்பாணையின்படி, காவல்துறைக்கு அவர் ஆற்றிய சேவையை அங்கீகரிக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் அறிவுறுத்தலின்படி தட்டாப்பறை காவல் நிலைய உதவி ஆய்வாளர் குமரேசன் மற்றும் போலீசார் இன்று (10.05.2024) அன்னாரது இறுதி சடங்கில் கலந்து கொண்டு, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் சார்பாக மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory