» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் திடீர் மழை : மக்கள் மகிழ்ச்சி!

வெள்ளி 10, மே 2024 4:22:14 PM (IST)



கோவில்பட்டியில் திடீரென பலத்த மழை பெய்ததால் கோடை வெப்பம் சற்று தனிந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. பகல் மட்டுமின்றி, இரவு நேரங்களிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவில்பட்டி பகுதியில் இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் இருந்த போதிலும், பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சிறிது நேரத்தில் லேசான சாரல் மழையுடன் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. கடும் வெப்பத்தினால் அவதிப்பட்டு வந்த மக்கள் கோடை மழையினால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory