» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பாஞ்சாலங்குறிச்சி திருவிழா பாதுகாப்பு பணிகளை எஸ்பி பாலாஜி சரவணன் ஆய்வு
வெள்ளி 10, மே 2024 4:00:53 PM (IST)
பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளை எஸ்பி பாலாஜி சரவணன் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சியில் வீரசக்கதேவி ஆலயத்தின் 68வது உற்சவ திருவிழா இன்று (10.05.2024) மற்றும் நாளை (11.05.2024) நடைபெறுவதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி கோவில் வளாகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்து காவல் துறையினருக்கு ஆலோசனைகள் வழங்கி பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.