» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவிகள்!

வெள்ளி 10, மே 2024 3:06:06 PM (IST)



கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 491 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 312  மாணவிகள் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுதியதில் 250 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள்  நிவாஷனி 491 மதிப்பெண்களும், விஜயலட்சுமி 488 மதிப்பெண்களும்,ரேணுகா 485 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

3 மாணவிகள் கணிதப் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 450 மதிப்பெண்களுக்கு மேல் 21 மாணவிகளும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 61 மாணவிகளும் பெற்றுள்ளனர். பள்ளியின் தேர்ச்சி சதவீதம் 80% ஆகும். சாதனை படைத்த மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா உள்பட ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory