» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெண் எஸ்.ஐ., மீது வன்கொடுமை வழக்கு பதிவு
புதன் 8, மே 2024 8:42:02 AM (IST)
கோவில்பட்டியில் பெண் எஸ்.ஐ, மற்றும் பெண் போலீஸ்காரர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வழக்கறிஞர் முத்துசாமி டிச., 19ல் வழக்கு தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம் சென்றார். அப்போது, எஸ்.ஐ., ஆரோக்கிய ஜென்சி, போலீஸ்காரர் சரண்யா ஆகிய இருவரும் முத்துசாமியை அவதுாறாக பேசியுள்ளனர்.
இதுகுறித்து, கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் முத்துசாமி புகார் செய்தார். மேலும், எஸ்.ஐ., மற்றும் பெண் போலீஸ் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க துாத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்ய எஸ்.பி.,க்கு உத்தரவிட்டார்.
இதற்கிடையில், இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி பெண் எஸ்.ஐ., ஆரோக்கிய ஜென்ஸி, காவலர் சரண்யா இருவரும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். அதை விசாரித்த நீதிபதி, 'துாத்துக்குடி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது' என, மனுவை நிராகரித்தார்.
இதையடுத்து, எஸ்.ஐ, ஆரோக்கிய ஜென்ஸி மற்றும் பெண் போலீஸ்காரர் சரண்யா ஆகிய இருவர் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எஸ்.ஐ., ராமச்சந்திரன் வழக்கு பதிவு செய்துள்ளார்.
Poovaiya Rமே 9, 2024 - 10:41:29 AM | Posted IP 162.1*****