» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி முத்தாரம்மன் கோவில் கொடை விழா
செவ்வாய் 7, மே 2024 3:41:41 PM (IST)
தூத்துக்குடி முத்தாரம்மன் திருக்கோவில் கொடை விழாவில் அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி வடக்கு ரதவீதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் கொடை விழா கடந்த 30ஆம் தேதி தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாரணை நடந்தது. கொடை விழாவை முன்னிட்டு இன்று காலை கணபதி ஹோமம் கும்ப பூஜை நடந்தது. பக்தர்கள் பால்குடம் ஊர்வலம் நடந்தது. பின்னர் அம்மனுக்கு அபிஷேகம் அலங்கார தீபாரதனை நடந்தது.
அதனை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளரும், 39வது வட்ட செயலாளருமான திருச்சிற்றம்பலம் ஏற்பாட்டில் சுமார் 4000 பேருக்கு அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அன்னதானத்தை வழங்கி துவங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் அதிமுக அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் இரா.சுதாகர், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம்.பெருமாள், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக் ராஜா, மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தனராஜ், மாவட்ட சிறுபாண்மை பிரிவு செயலாளர் கே.ஜெ.பிரபாகர், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் மனுவேல் ராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.